துயரங்களின் சவம் மேயும்
கானகமொன்றில்
ஒற்றைக் குடிசையில்
விடிந்தே விடாத இரவுகளோடு
சாயுங்காலத்தின் பேரழகு போர்த்தி மெல்லுறங்குவாய் சகி
காயம் செய்து விடாத கலவியும்
சாயம் போகாத காதலும்
வெளியெங்கும் நிறைய
பதுங்கு குழிப் போராளிப் பிணங்கள்குறித்தோ
ஒபாமாவின் இனிக்காலப் போர்க் கொள்கைகளிளோ
புவிச் சூட்டிலுருகும் திடநீர்ப் பாலைகளையோ
அபுகாரிபின் நிர்வாணங்களையோ
மறந்த மனநோய்க்காளான நான்
கூரையின் கீற்றுகளைப் பிரித்தெறிந்து
வானம்நுழைத்து
பரஸ்பரம் பேசிக் கொள்வோம்.
நீ பேரழகியாகிப் போனதொரு கதை குறித்து...

Comments
Post a Comment