நிகழ்வுகளுக்கும்
ஆசைக்குமான பந்தயத்தில்
இடைக்கயிறாய் மாட்டிக் கொள்வது
மிகக் கொடுமையானது
மேற்பரப்பில் மிதந்து பரவிய
வெங்காயத் தாமரைக்கடியில்
தேங்கிக் கிடக்கிறதென்
பாயத் துடிக்கும் பெருநதி.
பாயத் துடிக்கும் பெருநதி.
ரகஸ்யங்களைப் புலப்படுத்தாது
காலம் தன் சுழிகளைச்
சாதுர்யமாய் காற்றில் வரைகிறது
பள்ளங்களில் பாய்ந்து
தேங்கி
நிரமபி
மேலாக வழிந்து
தாவரந்தழுவி
ஓட ..... ஓட .....
என்றாவது தெரியும்
புத்தனின்
கடற் பெரு வெளிச்சம்

Comments
Post a Comment