என் முத்தங்களில் உடையும் மௌனங்களில்
பெருமூச்சின் கரையோரம் ஓய்ந்து
மீன் பிடித்த தருணங்களில்
ஆகச் சிறந்த தழுவல்களில்
என் அக்குள்களில் நசநசக்கும்
உதட்டுச் சாயங்களில்
ஆதிரா?
நாம் தின்கிறோம்
காலங்களை
சாவிகளை விழுங்கிவிட்ட ஜனங்களை
சாமங்களில் எப்போதாவது எழுப்பும் கணவனை
பேரன்பைப் பிரசவிக்காத இருதயங்களை
தலை கோதாத கைகளை
ஸ்கலிதமானதும் சரியும் பிரேதங்களை
பெருமூச்சின் கரையோரம் ஓய்ந்து
மீன் பிடித்த தருணங்களில்
ஆகச் சிறந்த தழுவல்களில்
என் அக்குள்களில் நசநசக்கும்
உதட்டுச் சாயங்களில்
ஆதிரா?
நாம் தின்கிறோம்
காலங்களை
சாவிகளை விழுங்கிவிட்ட ஜனங்களை
சாமங்களில் எப்போதாவது எழுப்பும் கணவனை
பேரன்பைப் பிரசவிக்காத இருதயங்களை
தலை கோதாத கைகளை
ஸ்கலிதமானதும் சரியும் பிரேதங்களை

Comments
Post a Comment