சௌந்தர்யா


நேற்று சௌந்தர்யா என்னுடன்படுக்கையிலிருந்தாள்
பாதங்களிலிருந்து உச்சி வரை
என் செயலுக்கு
கைவிரல்களில் சிக்கி விரிப்புகள் கசங்கின
தன்னை வீணாக்கியவனென்று
அவளால் சொல்லப்பட்டவன்
திறக்காமலே கொண்டு சென்று விட்ட
பேரன்பின் இரகசிய அறைகளை
தேடும் வேட்கை
அவளின் கண்களில் தெரிந்தது
நானும் இறக்கி வைத்தாக வேண்டும்
கால்களில் மென்மையாகப் படர்ந்திருந்த
ரோமங்களை
உதடுகளால் கவ்வி இழுத்தேன்
சன்னலுக்கு வெளியே மிதந்த
நட்சத்திரங்களில் ஏதோ ஒன்றில்
ஒளியாய்க் கலந்தோம்.
உள்ளும் புறமும் குளிர்ந்து கிடந்த
விடியற்காலையில்
எவ்வளவு மறுத்தும் திரும்பத் திணித்தாள்
கசங்கிய ரூபாய்களை
கதவுகள் திறந்ததும்
காத்திருந்த வெளிச்சம்
தாவிப் பாய்ந்தது
மிச்சங்களைத் தின்பதற்காக
மெலிதாகப் புன்னகைத்து விடை பெற்றாள்.

Comments