இரண்டு மணல்துளிகளுக்கிடையில் கூட
நீரில்லாது
நான் கடல் குடித்ததொரு நாளில்
சாயங்களற்ற உதடுகளோடு
முத்தமிடுவாய்
கானல் நீருக்கலையும்
மீன் கூட்டங்களை விரல்களால் தழுவியபடி
நேசயாய் நேசிக்கும்
கடலையே முத்தமிட்டதாய் சிலாகித்து
மரக்குவளையொன்றில்
முலைப்பாலொடு மதுவும்
கலந்து மடியிருத்திப் புகட்டுவாய்
உன் நகங்களில் வழியும்
கடைசித் துளியையும்
உறிஞ்சியபடி கேட்பேன்
ஆதிரா,,,,
நட்சத்திரங்களையும் நீ
நேசிக்கிறாயா என்ன-
வேகவேகமாய்
மேகங்களுக்குள் புதைந்து கொள்கிறது
சிமிட்டிகள்
நீரில்லாது
நான் கடல் குடித்ததொரு நாளில்
சாயங்களற்ற உதடுகளோடு
முத்தமிடுவாய்
கானல் நீருக்கலையும்
மீன் கூட்டங்களை விரல்களால் தழுவியபடி
நேசயாய் நேசிக்கும்
கடலையே முத்தமிட்டதாய் சிலாகித்து
மரக்குவளையொன்றில்
முலைப்பாலொடு மதுவும்
கலந்து மடியிருத்திப் புகட்டுவாய்
உன் நகங்களில் வழியும்
கடைசித் துளியையும்
உறிஞ்சியபடி கேட்பேன்
ஆதிரா,,,,
நட்சத்திரங்களையும் நீ
நேசிக்கிறாயா என்ன-
வேகவேகமாய்
மேகங்களுக்குள் புதைந்து கொள்கிறது
சிமிட்டிகள்

Comments
Post a Comment